செங்கல்பட்டு, மார்ச் 17 – வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ரூ 6 கோடியில் வன உயிரினங்களுக்கான மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதாக அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வண்டலூரில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வியாழ னன்று (மார்ச் 17) தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். பூங்காவில் கூடுதல் வசதிகளை உருவாக்கி பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது, இதற்கான நிதி ஒதுக்கீடு வரும் நிதிநிலை அறிக்கையில் பெறப்பட்டு விரைவில் பணிகள் மேற்கொள் ளப்படவுள்ளது என்றார். பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், உயிரியல் பூங்காவில் பழுதடைந்துள்ள சுற்றுச்சுவரை சீரமைக்கவும், பறவைகள் மற்றும் விலங்கு களுக்கான கூடாரங்களை முழுமையாக புதுப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். பூங்காவில் விலங்குகளுக்கு நல்ல உணவு வழங்கவும் , கோடைக்காலத்தில் குடி நீர் வழங்கவும் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது . இங்கு பணிசெய்யும் தற்காலிக பணியாளர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்களின் கோரிக்கையின்படி தகுதியானவர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய சலுகைகள் மற்றும் பணிவரன் முறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வுகளின்போது கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர் , அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வி.கருணப்பிரியா, துணை இயக்குநர் , அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர் ஆர் . காஞ்சனா, சென்னை , கிண்டி தேசிய பூங்கா வன உயிரினக் காப்பாளர் பிரசாந்த், உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர்கள் ஏ.தயாசேகர், கே.ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.