செங்கல்பட்டு, ஜூன் 7 செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த பைய னூர் ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தவாக்கம் பகுதியில் வியாழனன்று இரவு காற்று டன் பெய்த கனமழையின் போது மின்கம்பத்திலிருந்து மின்கம்பி அறுந்து கீழே விழுந்தது.
பழைய மாமல்லபுரம் சாலை அருகே தனி யாருக்கு சொந்தமான இடத்தில் போடப்பட்டிருந்த முள்வேலி மேல் அந்த கம்பி விழுந்ததால் முள்வேலி முழு வதும் மின்சாரம் பாய்ந்தது. இந்நிலையில் மேய்ச்சல் முடிந்து இரவு வீடு திரும்பிய மாடுகள் முள்வேலி ஓரமாக சென்றபோது மின்சாரம் பாய்ந்து இறந்தன.
இதில் ஒரு கன்றுக்குட்டி உள்ளிட்ட ஒன்பது மாடுகள் பரிதாப மாக உயிரிழந்தன. இதனை அறிந்த அப் பகுதி பொதுமக்கள் உடன டியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மின்சாரத் துறையினர் மின்சாரத்தை துண்டித்து கம்பியை அகற்றினர். இறந்த மாடு களை பொதுமக்கள் அப்புறப்படுத்தினர். இச்சம் பவம் குறித்து மாமல்லபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.