districts

செங்கல்பட்டு அருகே 4 வாகனங்கள் மோதி விபத்து: தாய், மகள் உயிரிழப்பு

செங்கல்பட்டு,ஜூலை 7- சென்னை தாழம்பூரில் காசா கிராண்ட் சுப்ரீம் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுதர்சன் (37) இவர் ஆந்திர மாநிலம் தடா பகுதியில் மின் பொறியாள ராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ரஞ்சினி (36) என்ற மனைவியும் சாத்விகா மற்றும் (18),மனஸ்வினி(6) என இரண்டு மகள்கள் உள்ளனர்.

சனி, ஞாயிறு இரண்டு நாள் விடுமுறை என்பதால் தடாவிலிருந்து தாழம்பூரில் உள்ள தனது வீட்டிற்கு குடும்பத்துடன் வந்த சுதர்சன், சனிக்கிழமை காலை மதுராந்தகம் அருகே தங்களுக்கு சொந்தமான மாட்டுப்பண் ணைக்கு குடும்பத்துடன் சென்றார். திங்க ளன்று பணிக்கு செல்ல வேண்டியுள்ளதால் ஞாயிறன்று மீண்டும் தடா புறப்பட்டார்.  அப்போது செங்கல்பட்டு அருகே பழ வேலி திருச்சி சென்னை தேசிய நெடுஞ் சாலையில் தனியார் கம்பெனி பேருந்து சாலையை கடப்பதற்காக நின்றிருந்த போது சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து அந்த பேருந்து மீது மோதியது.

 அந்த பேருந்தின் பின்னால் வந்த சுதர்சன் கார் ஆம்னி பேருந்தின் மீது மோதியது. காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரி சுதர்சன் கார்மீது மோதியதில் கார் ஆம்னி பேருந்து லாரிக்கு இடையே சிக்கி  சின்னாபின்னமானது.இதில் காரில் பயணித்த ரஞ்சனி மற்றும் மனஸ்வினி இருவரும் உடல்நசுங்கி காருக்குள்ளேயே  உயிரிழந்தனர்.

சுதர்சன் மற்றும் மூத்த மகள் சாத்விகா இருவரும் லேசான காயங்களு டன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்த வர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் உயிரிழந்த இருவரது உடல்களை யும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த  விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.