districts

img

வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பால சுவரில் ஓவியங்கள்

வேலூர், அக். 27- வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பால சுவர்களில் இருபுறமும் போஸ்டர்கள் ஒட்டி அசிங்கப்படுத்துகின்றனர். இதனால் மேம்பாலச் சுவர்கள் அலங்கோலமாக காட்சி அளித்தது. இதையடுத்து மேம்பாலச் சுவர்களை அழகுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. கிரீன் சர்க்கிளின் இருபுறமும் உள்ள மேம்பால சுவர்களில் பல வகையான ஓவியங்களை வரையும் பணி கடந்த மாதம் தொடங்கியது. இதற்காக மேம்பால சுவர்களில் இருபுறமும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றி அதில் வெள்ளை நிற வண்ணம் தீட்டும் பணி நடந்தது. கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் பல்வேறு வர்ணங்கள் பூசப்பட்டு ஓவியங்கள் வரையும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுவற்றின் ஒரு பகுதியில் வரையப்பட்டுள்ள வேலூர் வரலாற்று சிறப்பு மிகுந்த சிப்பாய் புரட்சி நினைவு தூண், கோட்டை மதில் சுவர் உச்பட பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேம்பாலத்தின் சுவர்களில் இருபுறமும் வண்ண ஓவியங்கள் தீட்டப்படுகிறது. கல்வித்துறை சார்பில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள், அரசு நல திட்டங்கள் போன்றவை பட விளக்கங்களாக இந்த மேம்பாலங்களில் ஓவியமாக வரையப்படுகிறது.