வேலூர், ஜூன் 23 - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த வேலூர் மாநகராட்சியில் உள்ள 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களைச் சேர்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை சார்ந்த 120 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் வேலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் இதற்கான விழா நடைபெற்றது. வேலூர் கிளை செயலாளர் வாரா தலைமையில் வேலூர் மாநக ராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2023 - 24வது கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த விழாவில் தமுஎகச மாநில துணைப்பொதுச் செயலாளர் ஆர்.உமா, எழுத்தாளர் மா.சினேகலதா தமுஎகச முன்னாள் மாவட்ட தலைவர் முல்லை வாசன், வேலூர் வாசிப்பு இயக்க தலை வர் முத்து.சிலுப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மாண வர்களுக்கு விருதுகளை வழங்கி பேசினர். தமுஎகச மாவட்ட செயலாளர் எஸ்.சுரேந்திரன், மாவட்ட தலைவர் சகுவரதன், பொருளாளர் கி.உமாநாத் ,முதுகலை ஆசி ரியர் ஆர்.எஸ்.அஜீஸ்குமார், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், காட்பாடி கிளை தலைவர் எழுத்தோவியன், மின்சிறகுகள் கிளை தலைவர் கு.தருமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.