districts

img

ஆறுகளிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடும்பணி தீவிரம்

வேலூர், அக்.25- வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை ஆகிய மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பின. தொடர்ந்து கோடை காலத்தில் நீர் இருப்பு குறைந்த நிலை யில் தென்மேற்கு பருவழையும் சராசரி அளவைவிட கூடுதலாகவே பெய்தது. இதன்காரணமாக பாலாற்றில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் இருந்து நீர்வள ஆதாரத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக ளுக்கு நீர் நிரப்ப தடை விதிக்கப் பட்டது.  வடகிழக்கு பருவமழை நீரை சேமிக்கவும் அந்த நேரத்தில் ஏரிகள் நிரம்பினால் பொதுமக்க ளுக்கு பெரும் சேதம் ஏற்படக்  கூடும் என்று கணிக்கப்பட்டது.  எனவே, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த காலங்க ளில் ஆண்டு சராசரி மழையளவு 980 மி.மீ என்றளவு இருக்கும். அதில், பெரும்பகுதி வடகிழக்கு பருவ மழை காலத்தில் கிடைக்கும் என்ப தால் அதிக அளவு ஏரிகளில் தண்ணீரை நிரப்ப தடை விதிக்கப் பட்டது.  தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. எனவே, இப்போதிருந்தே ஏரிகளில் நீர் நிரப்ப பொது பணித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.