districts

img

வேட்டைக்காரன் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

வேலூர் ஜூன் 11 - வேலூர் மாவட்டத்தில் வேட்டைக்காரன் இனத்தை பழங்குடி பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் வலி யுறுத்தியுள்ளது. சங்கத்தின் வேலூர், மாவட்ட மாநாடு கண்டமங்கலம் கூட்டுச் சாலையில் நடைபெற்றது. சீனிவாசன்  தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் கெங்காதுரை மாநாட்டை துவக்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ப.சக்திவேல், பொருளாளர் சி.எஸ்.மகா லிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாவட்டத் தலைவராக சீனிவாசன், செயலாளராக ரமேஷ், பொருளாளராக வெங்கடேசன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். வேட்டைக்காரன் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க கோரியும் வேட்டைக் காரன் இன மக்களுக்கு குடிமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள், அரசு நலத்திட்டங்கள் வழங்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.