districts

ஓடும் லாரியில் தீ

வேலூர், மார்ச் 3- வாணியம்பாடி கடைகளுக்கு அரிசி பருப்பு, மளிகை பொருட்கள், சைக்கிள் உதிரி பாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னையிலிருந்து லாரி ஒன்று வேலூர் வழியாக சென்றது. கொணவட்டம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தீ பிடித்து. இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர்.  அந்த நிலையத்தில் வாகனங்கள் இல்லாததால் காட்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் லாரியிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து நாச மானது. அதன்பிறகு தீ அணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.