வேலூர். ஜூன் 15 - வேலூர் அண்ணாசாலையில் பழைய மீன்மார்க்கெட் வளாகத்தின் முன்பு சிஐடியு வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுத்தம் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
ழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற் காக ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். மேலும் இந்த ஆட்டோ ஸ்டேண்டு பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறுமின்றி உள்ளது. இந்நிலையில் கோடைக்காலத்தை முன்னிட்டு சங்கத்தின் சார்பில் சிறியதாக கீற்றுகூரை அமைத்து பொதுமக்கள் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்மோர் பந்தலும் அமைக்கப்பட்டது.
சிலநேரங்களில் வெயிலின் தாக்கத்தால் பல முதியவர்கள் இங்கு இளைப்பாறி செல்கின்றனர். இதனை பொறுத்து க்கொள்ளமுடியாத சிலமர்மநபர்கள் கடந்த புதனன்று இரவு பெயர்ப்பலகை மற்றும் பந்தலுக்கு தீ வைத்துள்ளனர். இதில் பந்தல் முழுவதும் தீயில் எரிந்து கருகிப் போனது.
இதனை அறிந்த சங்க நிர்வாகிகள் கிளை தலைவர் ஜான்பீட்டர் செயலாளர் ரஹீம்கான் ஆகி யோர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து சிஐடியு மாவட்ட தலைவர் டி.முரளி, ஆட்டோ தொழி லாளர் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.ராமு, கிளை பொருளாளர் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் வரும் செவ்வா யன்று (ஜூன் 18) அண்ணா கலையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.