districts

img

வாட்சப் புகாரை ஏற்று வேலூர் ஆணையர் நடவடிக்கை

வேலூர். ஜூன் 21 – காட்பாடி சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றகோரி வாட்சாப்பில் அளிக்கப்பட்ட புகாரை ஏற்று நடவடிக்கை எடுத்த ஆணையர் ஜானகி ரவீந்தி ரன் செயல் பாராட்டுக் குறியது.

வேலூர் மாநகராட்சி 4வது மண்டலம் 17வது வார்டுக்குட்பட்ட காட்பாடி சாலையில் தினந்தோறும் சிஎம்சி மருத்துவமனைக்கு வேலைக்கு செல்பவர்கள், நோயாளிகள் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவமனைக்கு ஏராள மான வெளிமாநில, பங்களா தேஷ் போன்ற வெளிநாடு களிலிருந்து நோயாளிகள் சிகிச்சை பெற வருவதால் அவர்கள் தங்குவதற்கு காட்பாடி சாலையில் ஏராள மான தனியார் தங்கும் விடு திகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. அந்த கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ப வர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

மார்க்சிஸ்ட் கட்சி மற்றும்  சமூக ஆர்வலர்கள் சார்பில் வேலூர் மாநகராட்சி ஆணையருக்கு சாலையில் கழிவுநீர் செல்லும் காட்சி  வீடியோ எடுத்து வாட்சாப் பில் வியாழனன்று அனுப்பி  வைக்கப்பட்டது. இதனை யடுத்து ஆணையர் ஜானகி ரவீந்திரன் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் சவுந்தரராஜன், மாநகர்நல அலுவலர் கணேஷ், மேற் பார்வையாளர் வைஷ்ணவி ஆகியோர்  கால்வாய் அடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு சரிசெய்தனர். மேலும் அந்த இடத்தில் தற்காலிமாக பைப்லைன் மூலம் கழிவுநீர் செல்ல வழி  ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

அப்போது அவ்வழி யாக வந்த வேலூர் மாநக ராட்சி மேயர் சுஜாதா அதி காரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் பொதுமக்களிடம் கால் வாயை இடித்து அகற்றி விட்டு புதிய கால்வாய் அமைக்க நிதிஒதுக்கி ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.