districts

விதிமுறைகளை மீறினால் எருதுவிடும் விழாவுக்கு தடை

வேலூர்,ஜன.20- வேலுர் மாவட்டத்தில் எருதுவிடும் திருவிழா நடத்துவது தொடர்பாக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த நிபந்தனை களை விழாக்குழுவினர் சரியான முறையில் கடைபிடிக்காமல் அலட்சியத்துடன் விழா நடத்தி வருவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும் அரசால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மீறப்படு வது தெரிய வருகிறது.  அரசின் விதிகளின்படி இரட்டை தடுப்பான்கள் அமைத்திருக்க வேண்டும். மாடுகள் ஓடும் இடத்தில் அதிபட்ச மாக குறிப்பிடப் பட்ட 25 தன்னார்வ தொண்டர்களுக்கு அதிகமாகவும், எராள மான பொது மக்களும், காளை உரிமை யாளர்களும் கூடி மாடுகள் எளிதான ஓடுவதற்கு தடையாக உள்ளனர்.  விழா ஆரம்பம் மற்றும் முடிக்கும் நேரங்கள் நிபந்தனைகளில் உள்ள வாறு கடைபிடிக்கப்பது இல்லை. வருவாய் மற்றும் காவல்துறை யின ரின் அறிவுரைகளை கடைபிடிக்கப் படுவதில்லை. விழாக்குழுவினர் அதை கண்டுகொள்ளுவதும் இல்லை. அவ்வப்போது காளைகள் பொதுமக்கள் பகுதியில் எதிர்பாராத விதமாக புகுந்து பொது மக்களுக்கு காயத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது.  அரசு வழங்கி உள்ள உரிய பாது காப்பு நெறிமுறைகளை கடைபிடித்து விழாக்குழுவினர் அந்தந்த கிராமங்களில் மிகவும் பாதுகாப்பான முறையிலும், பொதுமக்கள் மற்றும் காளைகளுக்கு பாதுகாப்பான முறையில் விழாக்கள் நடத்திக் கொள்ள சம்மந்தப்பட்ட விழாக்குழுவினருக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் பட்சத்தில் எருதுவிடும் விழா தடை செய்யப்படும் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.