விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுடுமண் தோசை கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.தொன்மையான மனிதர்களின் வாழ்விட பகுதியாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க அணிகலன், தங்க பட்டை, சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண் அகல்விளக்கு, காதணி, எடைக்கல், பதக்கம், கண்ணாடி மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல்கள், யானை தந்ததால் ஆன பகடை, தக்களி, செங்கல், சில்லு வட்டம், ஆண் உருவ சுடுமண் பொம்மை, சுடுமண் கிண்ணம் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கருப்பு நிற சுடுமண் தோசை கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான சுடுமண் தோசை கல் சேதமடைந்த நிலையில் உள்ளது.
மேலும், இங்கு தொடர்ந்து உணவு தயாரிக்கும் பொருட்கள் கண்டறியப்பட்டு வருவதால் தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த பகுதியாக இவை இருந்திருக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளனர்.