விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான நிகழ்வு மதநல்லிணக்கத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
வடமாநிலங்களில் தொடர்ந்து சிறுபான்மையினர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை சங்-பரிவாரத்தினர் மக்களிடையே விதைத்து வரும் வேளையில், தமிழ்நாடு , கேரளா போன்ற தென்மாநிலங்களிலும் சங்-பரிவாரத்தினர் மக்களின் ஒற்றுமை சிதைக்க மதரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.
ஆனால், சங்-பரிவாரத்தினர் வெறுப்பு பிரச்சாரம் தமிழ்நாட்டு, கேரளா போன்ற மாநிலங்களில் எடுபடவில்லை. ஊர் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் மதவேறுபாடுகளை கடந்து அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சாத்தூர் பகுதியில் வலம்வந்த பறவைகாவடி நிகழ்ச்சியின்போது, இஸ்லாமிய தம்பதியினர், கைக்குழந்தையை பறவைகாவடியில் வந்த பக்தரிடம் காட்டி ஆசி பெற்ற சம்பவம் மதநல்லிணக்கத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.