திருவில்லிபுத்தூர்,பிப்.25- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியம் சேது நாரா யணபுரம் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவைகளை மீண்டும் இயக்க வேண்டும். வத்திராயிருப்பில் இருந்து சேது நாராயணபுரம் செல்லும் சாலை கண்மாய் கரை சாலையாக இருப்பதால் கரையை ஒட்டி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை தினமும் வழங்குவதோடு ரூ, 250 சம்பளம் வழங்கி சுழற்சி முறையில் பணித்தள பொறுப்பாளரை நியமனம் செய்ய வேண்டும் .கிரா மத்தில் தினந்தோறும் ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரம் ,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி களை குறிப்பாக அருந்ததியர் தெரு உட்பட அனைத்து தெருக் களுக்கும் முறையாக செய்துகொடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சின்னத்தம்பி தலை மை வகித்தார். மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் பேசி னார். மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார், ஒன்றிய செயலா ளர் தங்கபாண்டியன் குமரன் ,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.