districts

மதிக்கும் வகையில் ஆளுநர்கள் நடந்து கொள்ள வேண்டும் ப.மாணிக்கம் தாகூர் எம்.பி பேட்டி

விருதுநகர், மார்ச்.3- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான வெற்றி, தமிழ்நாட்டு அரசின் வெற்றி, முதல்வரின் செயல்பாட்டிற்கு கிடைத்த வெற்றியாகும் என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர் கூறுகையில், அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக  வெற்றி பெறும் எனவும், . நேர்மையான தேர்தலை அதிகாரிகளை நடத்துவார்கள் எனவும் கூறினார். தற்போது பணநாயகம் வென்று விட்டது எனத் தேர்தல் ஆணையத்தை கூறுகிறார். அமித்ஷாவின் பாக்கெட்டில் தான்  தேர்தல் ஆணையம் உள்ளது. அதை குறை கூறுவது. அமித்ஷாவை குறை கூறுவது போலாகும். இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராகவும் அண்ணாமலைக்கு எதிராக வாக்குகள் விழுந்துள்ளன. அரவக்குறிச்சியில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் தான் அண்ணாமலை. அவர்  தற்போது கர்நாடகா மாநிலத்தின் பொறுப்பாளராகியுள்ளார்.  அதிமுகவை ஈரோட்டில் முடித்துவைத்து விட்டது போல், பாஜகவை  கர்நாடகாவில் முடித்து வைத்து விட்டுத்தான் வருவார். பாஜகவின் ஆளுநர்கள், தங்களது பதவியை பயன்படுத்தி ஆளுநர் மாளிகையை   கட்சி அலுவலகமாக மாற்றி வருகிறன்றனர். ஆளுநர்கள், தங்களது தகுதியை மீறக் கூடாது. அதை சீர்குலைக்கவும் கூடாது. தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி, அம்மாநில ஆளுநரான தமிழிசையை எதிர்த்து போராடி வருகின்றது. இது சரியான நகர்வாக இருக்காது. அனைவரும் மதிக்கும் வகையில்  ஆளுநர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.