விருதுநகர், ஜூலை 15- தியாகி சந்துருவின் 34 வது நினைவு தினத்தை யொட்டி போதை கலாச்சாரத் திற்கு எதிராக இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் இரத்ததான கழகம் மற்றும் ஸ்ரீஅம்பாள் இராமசாமி புஷ்ப மணி அம்மாள் அறக்கட்டளை இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.
விருதுநகரில் நடை பெற்ற இம்முகாமிற்கு கன் வீனர் எம.மாரிமுத்து தலை மை தாங்கினார். நகர செய லாளர் ஆர்.தீபக்குமார் வர வேற்புரையாற்றினார். பி. கருப்பசாமி முன்னிலை வகித்தார்.
முகாமை தொழிலதிபர் அம்பாள் ஆர்.முத்துமணி துவக்கி வைத்தார். மருத்து வக் கல்லூரி மருத்துவர் சாந்தினிகில்டா, சமூக ஆர்வ லர் எம்.ஊர்காவலன், வாலி பர் சங்க மாவட்ட செயலா ளர் எம்.ஜெயபாரத், முன் னாள் நிர்வாகிகள் எல்.முரு கன், பி.ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் நகரத் தலைவர் பொன்பாண்டி நன்றி கூறி னார்.