districts

img

இருவேறு சம்பவங்களில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை, முதியவர் பலி

விருதுநகர் அருகே மழை காரணமாக மண் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவரும், வத்திராயிருப்பு அருகே உள்ள காடனேரியில் 3 வயது குழந்தை ஒன்றும் பரிதாபமாக  உயிரிழந்தது.  

விருதுநகர் ஒன்றியம் செங்குன்றாபுரம் அருகே உள்ளது செங்கோட்டை கிராமம் இப்பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் (85). இவரது மனைவி இறந்து  விட்ட நிலையில்,  சொந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.  இந்நிலையில், தொடர் மழை காரணமாக வீட்டின் மண் சுவர் ஞாயிற்றுக்கிழமை இரவு  திடீரென  இடிந்து விழுந்தது. இதில், சம்பவ இடத்தில் முதியவர் காளியப்பன் உயிரிழந்தார். இதையடுத்து உடல்கூராய்வுக்காக அவரது உடல் விருதுநகர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம் : வத்திராயிருப்பு வட்டம், அழகாபுரி அருகே  உள்ளது காடனேரி கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த  முத்தீஸ்வரன்- இலங்கேஸ்வரி தம்பதியினர். இவர்களது மகள் முத்தீஸ்வரி (3).   திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்திருக்கிறார். அப்போது, வீட்டு மண் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை முத்தீஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து  குழந்தையின்  உடல்  வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

;