விருதுநகர், ஜூன் 24- எஸ்.சி, எஸ்.டி விவசாயி களுக்கு முழு மானியத்தில் கிணறு கள் அமைக்கும் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குறை தீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரி டம் வலியுறுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்ட விவசாயி கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட வரு வாய் அலுவலர் மங்களராமசுப்பிர மணியன், வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், நேர் முக உதவியாளர் (விவசாயம் ) சங் கர் எஸ்.நாராயணன், மத்திய கூட்டு றவு வங்கி இயக்குநர் இராஜலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், சிறுதானியங்களில் பிஸ்கட் தயார் செய்யும் இளம் ஆங்கில முதுநிலை பட்டதாரி தனசேகரனை மாவட்ட ஆட்சியர் பாராட்டி கௌரவித்தார். பின்பு, கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு : நென்மேனி அருகே வைப்பாற் றின் குறுக்கே கட்டப்பட்ட ஓடு பாலம் பெரு வெள்ளத்தில் அடித்துச் செல் லப்பட்டு விட்டது. அதன் பிறகு, அங்கு பாலம் கட்டவில்லை. இத னால், 8 ஊர்களைச் சேர்ந்த விவ சாயிகள் போய் வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, மீண்டும் அங்கு தரமான பாலம் கட்ட வேண் டும் என சாத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த ஆட்சியர், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றார். வேளாண்மைத்துறையில் 100 சதவீத மானியம் குறித்து ஏரா ளமான விவசாயிகளுக்கு தெரிய வில்லை. எனவே, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல் வேண்டும் என விவசாயி ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து பேசிய ஆட்சி யர், ஒன்றிய, மாநில அரசுகளின் மானியம் குறித்து வேளாண்மைத் துறை மூலம் பத்திரிகைகளுக்கு செய்தி தரப்படுகிறது. அச்செய்தி கள் மறுநாள் பத்திரிகைகளில் வருகிறது என தெரிவித்தார். பன்னைக் குட்டைகளில் தேங் கும் நீரை விவசாய நிலத்திற்கு கொண்டு செல்ல மானிய விலை யில் டீசல் என்ஜின் வழங்க வேண் டும் என விவசாயி ஒருவர் தெரிவித்தார். ‘டீசல் என்ஜின் உடனே வழங்கப்படும்’ அப்போது குறுக்கிட்ட வேளாண்மைத்துறை அதிகாரி, டீசல் என்ஜின் தேவைப்படும் விவ சாயிகள் இருந்தால் கூறுங்கள். உடனே வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்தார். பட்டியல் மற்றும் பழங்குடியின விவசாயிகள் கிணறுகள் அமைக்க 100 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.முருகன் தெரிவித்தார். மேலும், 16 விவசாயி களுக்கு வழங்க இலக்கு நிர்ணயம் செய்ததை உயர்த்தி கூடுதலான விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பலன் கிடைக்க ஏற்பாடு களைச் செய்தல் வேண்டும். பலர் பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் உள்ளனர். அதில் சில சிக்கல்கள் உள்ளன. பெயர் மாற்றம் செய்தால் மேலும் பலர் மனு வழங்க உள்ள னர் என தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த ஆட்சியர், பட்டியல் மற்றும் பழங்குடியின விவசாயிகள் இன்னும் இருந்தால் கூறுங்கள். மேலும் பட்டா பெயர் மாறுதல் விரைவில் நடைபெற வழி வகை செய்யப்படும் என உறுதி யளித்தார். சாத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப் படும் அரசுப் பேருந்தானது ஏழா யிரம்பண்ணை வழியாக கோவில் பட்டிக்கு சென்று விட்டு, மீண்டும் சாத்தூருக்கு வந்து கொண்டிருந் தது. அந்த பேருந்தை போக்குவரத் துத்துறை நிர்வாகம், எவ்வித அறி விப்புமின்றி திடீரென நிறுத்தி விட்டது. இதன் காரணமாக விவ சாயிகள் கோவில்பட்டியில் உரம், யூரியா வாங்கி வர முடியாமல் தவிக் கும் நிலை ஏற்பட்டுள்ளது என தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மனோஜ் குமார் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஆட்சியர், போக்குவரத்துத்துறை அதிகாரி கள் இதில் கவனம் செலுத்தி நட வடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார். நீர்வரத்து ஓடைகளில் தனிநபர் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்ற வேண்டும். மேலும் மனுக்கொடுத்தால் ஒரு மாதத்தில் பதில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோட்டாட்சியர் தலை மையில் நடைபெறும் விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ப தில்லை. இதனால், பல பிரச்சனை களுக்கு அங்கே தீர்வு கிடைக்கா மல், மாவட்டட ஆட்சியர் நடத்தும் குறைதீர் கூட்டத்திற்கு விவசாயிகள் அதிக அளவில் வருகின்றனர் என சிவகாசி பகுதியைச் சேர்ந்த விவ சாயி ஒருவர் தெரிவித்தார்.
அதிகாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
அப்போது பேசிய ஆட்சியர், கோட்டாட்சியர் நடத்தும் கூட்டங்க ளுக்கு கண்டிப்பாக பொதுப் பணித்துறை, மின்வாரியம், போக்கு வரத்துத்துறை அதிகாரிள 100 சத வீதம் பங்கேற்க வேண்டும்.அல்லது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். ஆணைக்குட்டம் அணையின் கதவணையை மாற்றி புதிய கத வணை அமைக்க வேண்டும். மேலும், கால்வாய்களை சீர் செய் தால் வாடியூர் வரை தண்ணீர் கிடைக்கும் எனவும், அர்ஜூனா ஆறு முழுவதும் படர்ந்துள்ள சீமைக்கரு வேல மரங்களை அகற்ற வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.