districts

img

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை, செப்.,29- விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை அருகே விஜயகரிசல்குளம் பகுதியில் நடைபெற்று வரும் 2ஆம் கட்ட அகழாய்வில் பழமையான தங்க நாணயம்  கண்டெடுக்கப்பட்டது.

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் அகழாய்வுபணிகள் நடைபெற்று வரு கின்றன. ஏற்கனவே, பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், தங்க அணிகலன், கண்ணாடி வளையல், திமிலுடன் கூடிய காளை பொம்மைகள், தட்டுகள் உள்ளிட்ட பல்வேறு அரிய வகையிலான பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற அகழாய்வில் தங்க நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 

இது, 17 ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்தது எனவும், தென் இந்திய பகுதியில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் எனவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த தங்க நாணயத்தில் ஒரு புறத்தில்  6 இதழ் கொண்ட பூ வடிவம் பொறிக்கப் பட்டுள்ளது.