பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கண்ணன் டிராக்டரின் டிரைலர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான குளத்தை பராமரிக்கும் பணி கடந்த 2ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் டிராக்டரை அப்பகுதியில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் சென்றுள்ளார். அடுத்த நாள் காலை வந்து பார்த்த போது, டிராகடரின் டிரைலர் காணாமல் போனது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, டிராக்டரின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராகடரின் டிரைலரை பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கண்ணன் மற்றும் கருப்புசாமி ஆகியோர் திருடியது தெரியவந்துள்ளது.