districts

img

விருதுநகர் அருகே  பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர், மார்ச் 2- விருதுநகர் அருகே உள்ளது ரெங்கப்பநாயக்கன்பட்டி. இங்கு மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான கணபதி  பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில், வியாழ னன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில், முழுமையாக தயார் செய்து சேமித்து வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து திடீரென வெடிச்  சத்தம் கேட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், அங்கி ருந்து தப்பிச் சென்றனர். இந்த விபத்தில், பட்டாசு சேமிப்பு குடோன் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. தக வல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீ  மற்ற அறைகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர். விபத்து  குறித்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.