ராணிப்பேட்டை, ஜூன்17 - ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப் பாக்கம் ஒன்றியம் உத்திரம்பட்டு ஊராட்சி யில் சுமார் 27 பழங்குடியின குடும்பங்கள் பட்டா இன்றி ஓலை கீற்று வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் மழைக்காலங்களில் பெரிதும் அவதிபடுகின்றனர். இதையடுத்து மழை மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைத்தலைவர் தமிழரசன் தலை மையில் ஞாயிறன்று (ஜுன்16) உத்திரம் பட்டு ஊராட்சி மன்ற தலைவர் க. மனோ கரனை நேரில் சந்தித்து பட்டா குறித்து பேசப்பட்டது.
மனோகரன் கூறுகையில் மாவட்ட நிர்வாகம் 27 பழங்குடியின குடும்பங்களில் 9 நபர்களுக்கு மட்டும் நத்தம் காலி இடத்தில் சர்வே எண். 594/5 இல் பட்டா வழங்கி உள்ளதாகவும் மற்றவர்களுக்கு வழங்கவில்லை என்றார். இதையடுத்து பழங்குடியின மக்களை ஒன்றிணைத்து இந்த கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது என சங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
முன்னதாக மலைவாழ் மக்கள் சங்க புதிய கிளை துவக்கப்பட்டது. கிளை தலை வராக க. மனோகரன், செயலாளராக எஸ். குப்பன், பொருளாளராக எஸ். சங்கர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். பழங்குடி யின மக்கள் கோரிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நிறைவேற்ற வேண்டும். இலவச பட்டாவுடன் வீடு கட்டித்தரவேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.