ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகா டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா பவுண்டரி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி திங்களன்று (ஜூன். 10) முத்துக்கடை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏஐசிசிடியு மாநில சிறப்பு தலைவர் சொ. இரணியப்பன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் வாலாஜா தாலுகா குழு தலைவர் ம.ஜெயகாந்தன், சென்னை பெருநகர மாவட்ட தலைவர் ஆபிரகாம், மாநிலத் துணைத் தலைவர் மு. தினேஷ் குமார், சிபிஎம்எல் மாவட்ட குழு உறுப்பினர் பிலால் உள்ளிட்டோர் பேசினர்.