districts

img

கனகாம்பரம் விளைச்சல்; விவசாயிகள் மகிழ்ச்சி

சின்னாளபட்டி, ஏப்.-24 திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், சின்னாள பட்டியை அடுத்த பெருமாள்  கோவில்பட்டி, ஜாதிகவுண்டன்  பட்டி, அமலிநகர், ரெங்கசாமி புரம், ஜெ.ஊத்துப்பட்டி, காம லாபுரம், முருகம்பட்டி, நடுப் பட்டி ஆகிய கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் களில் கனகாம்பர பூக்கள் பயி ரிடப்பட்டிருந்தது.  தற்போது, செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. தினசரி, அதி காலை- மாலை நேரங்களில் கனகாம்பரம் பறிக்கப்பட்டு சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, கும்ப கோணம் ஆகிய ஊர்களுக்கு அனுப்பப்படுகிறது.  தற்போது, மார்க்கெட்டில்  கனகாம்பரம்  கிலோ ரூ.300 வரை விற்கப்படுகிறது.   பூ பறிக்கும் தொழிலாளர்களுக்கு  ரூ.80 கூலியாக வழங்கப்படு கிறது. சராசரியாக ஒருவர் நாளொன்றுக்கு இரண்டு கிலோ பூக்களைத் தான் பறிக்க முடி யும். ஒரு வாரம் வரை கனகாம் பரம் வாடாது என்பதால் அலங்கார வேலைகளுக்காக அதிகளவில் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.