districts

மதுரை முக்கிய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூர், செப்.5 -  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளை ஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட புரசங்காடு தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்தவர்  ராஜ்குமார் (33). இவர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தி னர் வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர். இது தொடர்பாக, தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தர்ராஜன் விசாரித்து, ராஜ்குமாருக்கு 5  ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 30 ஆயிரம் அபரா தமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். பாதிக்கப் பட்ட சிறுமிக்கு நிவாரணத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்குமாறு அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

தாமரைக்குளம் அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய மக்கள்

அரியலூர், செப்.5 -  அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அப்பகுதி மக்கள் சார்பில் கல்விச் சீர்வரிசை  செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்து, ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் ரூ.6  லட்சம் மதிப்பில் பள்ளிக்குத் தேவையான கணினி, டேபிள், சேர், ஃபேன், பீரோ, குடம் உள்ளிட்ட பொருள் களை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் வழங் கினார். நிகழ்ச்சியில் அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் ஜெயா சிறப்புரையாற்றினார். பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, தலைமை ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, மனோன் மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வாகனங்கள் மூலம் கழிவுகளை  அகற்ற தொலைபேசி எண்

பட்டுக்கோட்டை, செப்.5- கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலமாக கழிவுகளை  அகற்ற, கட்டணமில்லா தொலைபேசி 14420 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொண்டு பயன்பெற லாம் என்று பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மனி தர்களை கொண்டு கைகளால் மனிதக் கழிவுகளை அகற்று வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்  கீழ் மீறப்படும் குற்றங்களுக்கு ஜாமீனில் வர அனுமதி கிடையாது. ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை  தண்டனையோ, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படலாம். எனவே, அனைவரும் கழிவு நீர்  தொட்டியை சுத்தம் செய்ய தானியங்கி கழிவு நீர் அகற்றும் வாகனத்தை பயன்படுத்த வேண்டும். நகராட்சி மற்றும்  மோட்டார் வாகன அலுவலகத்தில் பதிவு பெற்ற கழிவுநீர்  வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலமாக கழிவுகளை  அகற்ற கட்டணமில்லா தொலைபேசி 14420 என்ற எண்ணை  பொதுமக்கள் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” என  கூறப்பட்டுள்ளது. 

3புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

பொன்னமராவதி, செப்.5 - புதுக்கோட்டை மாவட்டம் கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் சென்னை அடை யார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை  அரசு தலைமை மருத்துவமனையின் சார்பாக ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம் மற்றும்  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி தலைமை வகித்தார். திட்ட மேலாளர் வெங்கடேஷ் முன் னிலை வகித்தார். மருத்துவக் குழுவினர் புற்றுநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இதனைத் தொடர்ந்து புற்றுநோய் சம்பந்தமான மருத்துவ ஆலோசனை, சிகிச்சை வழங்கப்பட்டது. இதில்  பள்ளி தலைமை ஆசிரியர் சுபத்ரா, பெற்றோர் ஆசிரியர்  கழக தலைவர் சங்கர், பள்ளி மேலாண்மை குழு தலைவி  யசோதா, சத்துணவு அமைப்பாளர் ராசு மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, செப்.5 - புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்  12.9.2023 அன்று காலை 11.30  மணி யளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற  உள்ளது. முன்னாள் படைவீரர்களது கோரிக்கை குறித்த மனுக்களை,  இரட்டைப் பிரதிகளில், அடையாள அட்டை நகலுடன் வழங்க வேண்டும்.  மேலும், மனு அளிக்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் காலை 10.30  மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில்  நேரில் ஆஜராகி தங்களது மனுக்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்  என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

செப்.13 முதல் ஊரக வளர்ச்சித்துறை  அலுவலர்கள் வேலை நிறுத்தம்

திருவாரூர், செப்.5- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலு வலர்கள் சங்கத்தின் சார்பில், தமிழக அரசு 16  அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி செப்.13 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.  காலியிடங்களை நிரப்புதல், ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வுநிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் வழங்குதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் கணினி உதவி யாளர்களை பணி நிரந்தரப் படுத்துதல், முழு சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட மக்கள் தொகை அடிப் படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றி யங்களை பிரித்தல். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், உதவிப் பொறியாளர்கள், செயற்பொறியா ளர்கள் ஆகிய நிலையில் உள்ள காலியி டங்களை நிரப்புதல், தமிழக முதலமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றுதல், அரசாணை 572ன்படி, கடந்த காலங்களில் வேலை நிறுத்த காலங்களை வரன்முறைப் படுத்துதல், அரசாணை 54 இல்  திருத்தம் செய்தல் உள்ளிட்ட 16அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13.9.2023 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை விளக்கி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை விளக்கி திருவா ரூர், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், மன்னார் குடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட ஐந்து மையங் களில் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.செந்தில் மற்றும் மாவட்டத் தலைவர் என். வசந்தன், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம், திருவாரூர் உள்ளிட்ட ஐந்து மையங்களில் வேலை நிறுத் தத்தையொட்டி விளக்க பிரச்சாரம் செய்த னர்.  பிரச்சாரத்தில் மாநிலத்தலைவர் எஸ்.ரமேஷ், மாநிலச் செயலாளர் எஸ்.ராஜசேகர்,  ஜம்ரூதிநிஷா ஆகியோர் சிறப்புரை ஆற்றி னர். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  நடைபெற்ற பிரச்சாரத்திற்கு வட்ட தலைவர் கள், வட்ட செயலாளர்கள் தலைமை வகித்த னர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிரச்சாரம் நிறைவு பெற்றது.

விடுதி மாணவர்களுக்கான  உணவுப்படியை உயர்த்தி வழங்குக!

மாணவர் சங்கம் கோரிக்கை
மாணவர் சங்கம் கோரிக்கை புதுக்கோட்டை, செப்.5- பள்ளி, கல்லூரி விடுதி மாணவர்களுக் கான உணவுப்படியினை உயர்த்தி வழங்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் புதுக் கோட்டை நகரப் பேரவைக் கூட்டம் நகரத் தலைவர் எஸ்.மகாலெட்சுமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  பேரவையைத் தொடங்கி வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். ஜனார்த்தனன், துணைத் தலைவர் இரா.வசந்தகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். அறிக்கையை முன்வைத்து செயலாளர்  பி.கார்த்திக்கேயன் பேசினார். மாநில செயற் குழு உறுப்பினர் ரெ.கார்த்திகாதேவி நிறை வுரையாற்றினார். சோ.ஹேமதர்ஷினி நன்றி  கூறினார். அனைத்து மகளிர் கல்லூரி மற்றும் விடுதிகளில் தூய்மையான, கூடுதல் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். விடுதி மாணவர்களின் உணவுப் படியினை உயர்த்தி வழங்க வேண்டும். கல்வி நிலையங்களில் உள்புகார் பெட்டி  (ஐசிசி) அமைக்க வேண்டும். கிராமப்புறங் களில் இருந்து வரும் பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கு கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தரமான சம்பா பருவ நெல்  விதைகளை விற்க அறிவுறுத்தல்

தஞ்சாவூர் செப்.5-  தனியார் விதை விற்பனை நிலையங்களில் சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தஞ்சா வூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் விநாயகமூர்த்தி அறி வுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சம்பா பரு வத்துக்கு உகந்த தரமான நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய  வேண்டும். தனியார் விதை விற்பனையாளர்கள் விதைகளை விற்பனை செய்யும் போது விவசாயிகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். விற்பனை ரசீதில் விவசாயி மற்றும் குவியல் விவரங்களை அவசியம் குறிப்பிட வேண்டும். நீண்ட கால மற்றும் மத்திய கால நெல் ரகங்கள் 3000  டன் விதைகள் தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய அறி வுறுத்தப்படுகிறது. சம்பா பருவத்துக்கு உகந்தது அல்லாத நெல் ரகங்களை விற்பனை செய்தாலோ, விதை சட்ட விதிகளைப் பின்பற்றாமலோ விற்பனை செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட  கடல் அட்டைகள் பறிமுதல்  ஒருவர் கைது 

தஞ்சாவூர், செப்.5-  கடல்வாழ் அரிய வகை  உயிரினங்களான கடற்பசு, கடற்குதிரை, கடல் அட்டை, பால் சுறா உள்ளிட்ட 53 வகையான அரிய வகை உயிரினங்கள், மீன் இனங்களை, மீனவர்கள் பிடிக்க ஒன்றிய-மாநில  அரசுகள் தடை செய்துள்ளன.  இந்நிலையில் தஞ்சா வூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஒன்றியம், செந்த லைப்பட்டினம் கடற்கரை பகுதியில் கடல் அட்டை களை பதப்படுத்தி மறைத்து  வைத்துள்ளதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் சதீஷ் உத்த ரவின் பேரில், தஞ்சை  மாவட்ட வன அலுவலர்  அகில் தம்பி ஆலோசனை யின்படி, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திர சேகரன் தலைமையிலான தனிப்படையினர் செந்தலைப் பட்டினம் கடற்கரைப் பகுதி யில் சோதனை மேற்கொண் டனர்.  இந்த சோதனையின் போது, கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட 110 கிலோ  கடல் அட்டைகளை வனத்து றையினர் பறிமுதல் செய்த னர். மேலும், கடல் அட்டை களை பதுக்கி வைத்திருந்த, பேராவூரணியை அடுத்த ஆலடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரை கைது செய்தனர்.  இந்த கடல் அட்டைகள் கள்ளச்சந்தையில் கிலோ ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்படு வதாக கூறப்படுகிறது.