நத்தம், செப்.11- திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி ஊராட்சி வலசு கிரா மத்தைச் சேர்ந்த மாணவர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்கு சென்று வரு வதால், அரசு பேருந்தை இயக்க வாலிபர் சங்கம் சாணார்பட்டி ஒன்றியக் குழு சார்பில் திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக வணிக மேலாளரிடம் மனு அளிக்கப்பட் டது. அந்த மனுவில், ‘‘வலசு கிராமத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் செங்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந் நிலையில், முறையான பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் வலசுவில் இருந்து செங்குறிச்சி வரை 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்கு சென்று வருகின்ற னர். எனவே, வலசுவில் உள்ள மாணவர்கள் வல்லம்பட்டி வரை வரும் பேருந்து வசதி யை பயன்படுத்தும் வகையில் வல்லம்பட்டி யில் இருந்து வலசு வரை பேருந்து வரு வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது. மனு கொடுக்கும் நிகழ்வில், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, ஒன்றியப் பொருளாளர் தங்கபாண்டி மற்றும் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வெள்ளை கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.