districts

img

இந்திய கடற்படையினரைக் கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை, அக்.22- தமிழக மீனவர்கள் மீது துப் பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்  படையினரைக் கண்டித்தும் அவர்  கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி யும் பாதிக்கப்பட்ட மீனவர் வீர வேலுக்கு அதிகபட்சமான இழப் பீட்டினை ஒன்றிய அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தியும் மதுரையில் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மதுரை - மாநகர், புறநகர்  மாவட்டக்குழுக் கள் சார்பில் சனிக்கிழமையன்று மதுரை ஸ்காட் ரோடு மீனாட்சி பஜார் தலைமை தபால் நிலை யம் அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாநகர்  மாவட்டச் செயலாளர் டி. செல்வா தலைமை வகித்தார்.  மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக் கண்டன உரையாற்றி னார்.  மாநகர் மாவட்ட துணைச் செய லாளர் எஸ். வேல்தேவா, நவீன், புறநகர்  மாவட்ட பொருளாளர் கருப்பசாமி, துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.