districts

img

கம்பத்தில் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் கைது

தேனி, ஏப்.3- கம்பத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளு டன் வாலிபரை கைது செய்த போலீசார், அவ ரிடமிருந்து 87,810 ரூபாய் கள்ள நோட்டுகள் மட்டும் அச்சடிக்க பயன்படுத்திய உபகர ணங்களையும் பறிமுதல் செய்தனர். கம்பத்தில் கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதாக கம்பம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் லாவண்யாவுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் காவல்துறை யினர் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் வெள்ளியன்று இரவு கம்பம் சுக்காங்கல் பட்டி தெருவைச் சேர்ந்த குணசேகரன் (35) என்பவரை பிடித்து சந்தே கத்தின் பேரில் சோதனை செய்தனர். அப் போது அவரிடம் ஒரே எண் கொண்ட ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தது. இதை யடுத்து அவரை பிடித்த காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் 500, 200, 100, 50, 10 ரூபாய் நோட்டுகள் என 87,810 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந் ததை பறிமுதல் செய்தனர்.  மேலும் இந்த நோட்டுகளை பிரிண்ட் செய்ய பயன்படுத்திய பிரிண்டர், ஸ்கேனர், கட்டர் மிஷின், பேப்பர் உள்ளிட்டவைகளை யும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.