மதுரை பெண்கள் தனிச்சிறையில் சமூக இயல் வல்லுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
மதுரை, டிச.5- மதுரை பெண்கள் தனிச்சிறையில் சமூக இயல் வல்லு நர் (Social Case Worker) பணியிடம் ஒன்று புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடம் பொதுப் போட்டி (முன்னுரிமை அற்றவருக்கு) ஒதுக்கப்பட்ட தாகும். சமூக இயல் வல்லுநர் பணியிடத்திற்கு 25.10.2022 அன்றைய நிலையில் குறைந்தபட்சம் வயது தகுதி 18 ஆக வும், அதிக பட்ச வயது (OC-32, BC & MBC -34, SC&ST, SCA - 37) ஆகவும் உள்ளது. முன்னாள் இராணுவத்தின ருக்கு வயது வரம்பு இல்லை. சமூக இயல் வல்லுநர் பத விக்கு அரசாணையின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகு தியான சமூக பணி அல்லது சமூக சேவை அல்லது சமூக அறிவியல் அல்லது குற்றவியல் அல்லது சமூகவியல் அல்லது ஆண்ட்ராகோஜி (வயது வந்தோர் கல்வி) (அல் லது) ஆகியவற்றில் முதுகலை பட்டம். சமூகப் பணி அல் லது சமூக சேவை அல்லது சமூக அறிவியல் அல்லது குற்றவியல் அல்லது சமூகவியலில் டிப்ளமோவுடன் கூடிய வேறு ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். தகுதியுள்ள நபர்கள் தங்களது கல்விச்சான்று, சாதிச்சான்று மற்றும் மேற்படி பணி யிடம் தொடர்பான பயிற்சிபெற்ற சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பத்தினை சிறைக்கண்காணிப்பா ளர், பெண்கள் தனிச்சிறை, மதுரை 16 என்ற முகவரிக்கு 15.12.2022-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்திட வேண்டும் என்று தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடுகளை திருட வந்த திருடனை கட்டிவைத்த பொதுமக்கள்
சின்னாளபட்டி, டிச.5- நிலக்கோட்டை அருகே ஆடு,மாடுகளை திருட வந்த வனை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து காவல்துறை யினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூ ராட்சிக்குட்பட்ட வத்தலக்குண்டு சாலையோரம் உள்ள மணியக்காரன்பட்டி சுதந்திரபாண்டி என்பவர் தோட்டத்துப்பகுதி வீட்டில் ஆடு,மாடுகள் கட்டிவைக்கப் பட்டிருந்தன. இந்நிலையில் திங்களன்று அதிகாலை வாலிபர் ஒருவர் திருட வந்ததாகவும், அப்போது அவரை மடக்கி பிடிக்க முயன்ற விவசாயிகளை திருப்பிதாக்கி கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பொது மக்களை அச்சுறுத்தி தப்பியோட முயன்ற வாலிபரை சுற்றிவளைத்து பிடித்த பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். நிலக்கோட்டை காவல்துறையினர் நடத்திய விசா ரணையில் திருடவந்தவன் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த முகமது பைசல் ( வயது 27) என்ப தும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்கு நிலு வையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து முக மது பைசல் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை யினர் நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். நிலக்கோட்டையின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக ஆடு,மாடு கோழிகள் மற்றும் விவசாய மோட்டார் பம்புகள், உபகரணங்கள் தொடர்ந்து திருடு போவதாகவும், இதுகுறித்து நிலக்கோட்டை காவல்துறை யினர் கண்டு கொள்வதில்லை எனவும் மாவட்ட காவல் துறையினர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை
விருதுநகர், டிச.5- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள் ளது சதுரகிரி சுந்தரமாலிங்கம் கோவில். இது கடல் மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள் ளது. மாதந்தோறும் பிரதோசம், அமாவாசை, பௌர்ணமி மற்றும் ஒரு சில நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களாக, வனப் பகுதிக்குள் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, திங்களன்று நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டிற்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் திடீரெனத் தடை விதித்தனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து தரிசனத்திற்காக வந்த தந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
திருவில்லிபுத்தூர், டிச.5- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெம்பக் கோட்டை காளவாசல் பெரியார் நகரில் வசிப்பவர் பால சுப்பிரமணியன் மகன் சக்திவேல் (வயது 20). கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 5.6.2021 அன்று செல் போன் சார்ஜர் வாங்க வந்த 8 வயது சிறுமியை வீட்டிற்குள் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். திருவில்லிபுத்தூ ரில் சிறார் பாலியல் குற்றத்தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கினை விசாரித்த நீதிபதி கே பூர்ண ஜெய ஆனந்த் ,குற்றம் சாட்டப்பட்ட சக்திவேலுக்கு 20 வருடம் சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராத மும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
கண்ணகி கோவில் பிரச்சனைக்கு தீர்வு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிவு
தேனி, டிச.5- கண்ணகி கோவில் நீண்டநாள் பிரச்ச னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. கோவிலை இந்து சமய அறநிலையத்துறை யின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் இத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கோவிலை கொண்டு வருதல் தொடர் பாக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அறிவிப்பு நோட்டீஸ் வெளி யிட்டுள்ளார். அதில், தமிழக எல்லையில் வண் ணாத்திப்பாறை மலையில் அமைந்துள்ள கண்ணகி திருக்கோயிலை இத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மேற்படி திருக்கோயிலை இத்துறை யின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரு வதற்கு ஆட்சேபணை ஏதும் இருப்பின் தேனி, பழனிசெட்டிபட்டியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணை யர் அலுவலகத்தில் ஒரு வர காலத்திற்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது என நிர்வாகி, கண்ணகி திருக் கோவில், மற்றும் கிராமநிர்வாக அலுவலர் கீழக்கூடலூர் ஆகியோர்களுக்கு தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் -கூட லூர் கிராமநிர்வாக அலுவலகத்தில் அறி விப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள் ளது.
மானாமதுரை புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை மாவட்ட ஆட்சியர் தகவல்
சிவகங்கை,டிச.3- சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலை யத்தில் நேரடி சேர்க்கையின் மூலம் எஸ்சிவிடி (SCVT) முறையில் இரண்டு ஆண்டு தொழிற் பிரிவுகளான மெக்கா னிக் மோட்டார் வெகிக்கிள், , சர்வேயர், எலக்ட்ரீசியன், ரெப்ரிஜிரேசன்- ஏ.சி.டெக்னிசியன் ஆகிய தொழிற் பிரிவு களில் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. மேற்கண்ட தொழிற் பிரிவுகளில் பயில கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடிச் சேர்க்கை யில் கலந்து கொள்ள தற்போது, தற்காலிகமாக மானா மதுரை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் செயல்பட்டு வரும் K.S.M.Polytechnic College, Papamadai, Ragam beeram Post, Manamadurai Taluk, Sivagangai Dist- 630 609 தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வருகை புரிய கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், நேரடி சேர்க்கைக்கு வரும் போது மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், 5 வண்ண பாஸ்போர்ட் படங்கள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல்களுடன் கூடுதலாக 2 நகல்கள் கொண்டு வர வேண்டும். சேர்க்கை தொடர்பான மேலும் விபரங்களுக்கு 98655 54672 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருச்சுழி புதிய அரசு ஐ.டி.ஐயில் மாணவர் சேர்க்கை: ஆட்சியர் தகவல்
விருதுநகர், டிச.5- விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சி யர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சுழியில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசு ஐ.டி.ஐ யில் பயிற்சியாளர்கள் சேர்க்கை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தினை தற்போது முதல் வரும் டிசம்பர்,30 வரை வழங்கலாம். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 14 முதல் 40 வரை. மாற்றுத்திறனாளி, முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு 14 -வயது உச்ச வரம்பு இல்லை. விண் ணப்பக் கட்டணம் ரூ.50 என்று தெரிவித்துள்ளார்.
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி, டிச.5- தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வரும் நிலையில் ஞாயி றன்று பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக வைகை, மஞ்சளாறு, சோத் துப்பாறை அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து காலை 1510 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை யில் இருந்து 1519 கன அடி நீர் வெளி யேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4695 மி.கன அடி. பெரியாறு அணையின் நீர்மட்டம் 40.40 அடியாக உள்ளது. வரத்து 1481 கன அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 7234 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடி. வரத்து 100 கன அடி. திறப்பு 40 கன அடி. இருப்பு 433.28 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.67 அடி. வரத்து 203 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 100 மி. கன அடி. மழையளவு ஆண்டிபட்டி 18.2, அரண்மனைபுதூர் 12.8, பெரியகுளம் 29, மஞ்சளாறு 17, சோத்துப்பாறை 28, வைகை அணை 8.6, போடி 15.2, உத்தமபாளையம் 1.6, கூடலூர் 3.4, பெரியாறு 16, தேக்கடி 17.2, சண்முகா நதி அணை 6.2 மி.மீ. மழை அளவு பதி வாகி உள்ளது.