சின்னாளப்பட்டி, மார்ச் 12- 6 ஆவது ரோல்பால் உலக கோப்பைக்கான போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடை பெறுகிறது. இதனை முன் னிட்டு திண்டுக்கல் மாவட் டம் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் ஸ்கேட்டிங் போட்டிக்கு வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. தேர்வு போட்டிகளில் தமி ழக அணி சார்பாக எஸ்.எஸ்.சுஸ்மிதா, எஸ்.கண்மணி, ஏ.தியோஸ்ரீசாயினி, வாசிமா உட்பட நான்கு மாணவிகள் பங்குபெறுவதற்காக பயிற்சி பெற்று வருகின்றனர். முதற் கட்ட பயிற்சி முகாம் அமைப் பாளர் மாஸ்டர் எம்.பிரேம் நாத், தலைமையில் முகாம் மேற்பார்வையாளர் எம்.பி. சுப்பிரமணியம், முகாம் பயிற்சியாளர் அமித்படேல், மகாராஷ்டிரா மாநில பயிற்சி யாளர் மோகினியாதவ் தலை மையில் வீராங்கனைகள் பயிற்சி பெற்று திரும்பினர். இது குறித்து ரோல்பால் ஸ்கேட்டிங் மாஸ்டர் எம். பிரேம்நாத் கூறுகையில், இதுவரை நடைபெற்ற 5 உலக கோப்பைக்கான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகளில் தமிழக அணி சார்பாக ராஜன் உள்விளை யாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற மாணவ ,மாணவிகள் நான்குமுறை தேர்வு பெற் றுள்ளனர். 6வது உலக கோப் பைக்கான ரோல்பால் போட்டிகளிலும் தமிழக அணி சார்பாக 4பேர் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்வு பெற் றுள்ளனர் என்று தெரிவித் தார்.