districts

img

தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி ஸ்கேட்டிங் மாரத்தான் மூலம் உலக சாதனை

விருதுநகர், அக்.16 விருதுநகரில் தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி 20 நிமி டங்களில் 8 கி.மீ தூரம் ஸ்கேட்டிங் மாரத்  தான் சென்று நோவா உலக சாதனை படைத்தனர் மாணவ, மாணவிகள். விருதுநகர் புதிய பேருந்து நிலை யத்தில் இந்தியன் இவன்ட்ஸ் அமைப்பு  சார்பில் தலைக்கவசத்தின் அவசி யத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்கேட்டிங் மாரத்தான் நடைபெற்றது. நோவா உலக சாதனையாக நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவ, மாண விகள், 20 நிமிடங்களில் சுமார் 8 கி.மீ  தூரத்தை ஸ்கேட்டிங் செய்து கடந்தனர். ஒரே நேரத்தில் 78 பேர் ஸ்கேட்டிங் மூலம்  இவ்வாறு செல்வது இதுவே உலகில்  முதல் தடவையாகும் என கூறப்படு கிறது. இந்த நிகழ்ச்சியில் 10 வயது முதல் 15 வயதுடைய மாணவ, மாணவிகள் சேலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை நகர்மன்றத் தலை வர் ஆர்.மாதவன் துவக்கி வைத்தார். நகர்மன்ற உறுப்பினர் கோ.ஜெயக் குமார் முன்னிலை வகித்தார். நோவா உலக சாதனை இயக்குநர் திலீபன், சி.இ.ஓ ராஜ்குமார் நடராஜன், நடுவர் குருபிரசாத் ஆகியோர் ஸ்கேட்டிங் மாரத்தானில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியை யோகா கலை நிபுணர் எப்.ஜெயக்குமார் ஒருங்கிணைத்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.