உதகை, ஜூன் 6- சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நீதிமன்ற பகுதி யில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து அகற்றப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப் பின் அவசிய நிலை கருதி, ஜுன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அனு சரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நீலகிரி மாவட்டம், ஊட்டி, காக்கா தோப்பு பகுதி யில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தின் பின்புறம் இருந்த பிளாஸ்டிக் கழிவு களை அகற்றும் பணிகள் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் தலைமையில் நடை பெற்றது. இதில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் நீதிபதி அப்துல் காதர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறிய தாவது, இந்த உலகத்தில் ஒவ்வொரு உயிரி னமும் வாழ முக்கியம் இந்த பூமியின் சுற்றுச் சூழல் தான். இயற்கை வளங்களான நீர்நிலை கள், காடுகள், வன உயிரினங்கள், வளிமண் டலம், பறவைகள், சோலைகள், கடற்கரை கள், மனிதர்கள் உட்பட அனைத்து உயிரி னங்களும் வாழ இன்றியமையாதது. உலகின் பல பகுதிகளில் நாம் சுவாசிக்கும் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலை யில் தான் உள்ளது. அதேவேளையில் பிளாஸ்டிக், ரசாயன கழிவுகள், குப்பைக் கழிவுகள் யாவும் இன்னும் ஆற்றிலும், கடலி லும் கலந்து அப்பகுதிகளை மாசுப் படுத்தி அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான உயிரி னங்களை உயிரிழக்கின்றது.
சுற்றுசூழல் சமநிலை என்பது மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்விற்கு அவசியமானது ஆகும். இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும், ஆபத்தா கவும் அமையும். உலக நாடுகள் அனைத் தும் இயற்கையான வாழிடங்களை பாது காத்து, அவற்றை மென்மேலும் சீரழிக்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி, நிலத்திலும், கடலிலும் உள்ள சீரழிந்த சூழல மைப்புகளை சரி செய்யும் பணிகளை உடனடி யாக தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கள் கூறினர். இந்த நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதி மன்ற நீதிபதி ஸ்ரீதரன், சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளர் லிங்கம், மாவட்ட உரிமையியல் நீதிபதி மோகன கிருஷ்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவர் தமிழினியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு பள்ளி, கல்லூரி கள் மற்றும் தன்னார்வலர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.