districts

img

சம்பளம் வழங்கக்கோரி காளையார்கோவில் என்டிசி ஆலையை தொழிலாளர்கள் முற்றுகை

சிவகங்கை,டிச.24- சிவகங்கை மாவட்டம் காளை யார்கோவில் காளீஸ்வரா என்டிசி மில் தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக வழங்காத வாழ்வாதார சம்ப ளத்தை வழங்க வலியுறுத்தி மில் வளாகத்தில் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பஞ்சாலை தொழிலாளர் சங்க (சிஐடியு) செயலாளர் நாகலிங்கம், துணைச் செயலாளர் மகேஸ் வரி, எல்பிஎப் செயலாளர் வீரையா, ஏடிபி செயலாளர் ஆரோக்கியம், நாகலிங்கம், இராமு. ஏஐடியுசி செயலாளர் சுந்தரம், ராஜ்குமார். ஐஎன்டியுசி தலைவர் மணிகண்டன், வாசு, நந்தக்குமார். எச்எம்எஸ் திரவி யம், கருப்பையா. டாக்டர் அம் பேத்கர் சங்கத் தலைவர் தொத்தப்பாண்டி, மனோஜ் குமார். உள்ளிட்ட சங்கத் தலை வர்கள் உட்பட ஏராளமான தொழி லாளர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து மேலாளர் சதீஷ் முன்னிலையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக் குள் சம்பளத்தை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.  மூடி ஆலைகளை திறக்க மறுக்கும் ஒன்றிய அரசு கொரோனா பரவலைக் காரணம்காட்டி கடந்த 22 மாதங்க ளாக  என்டிசி மில் உற்பத்தி நடை பெறவில்லை. திறப்பதற்தான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை. இந்தியா முழுவதும் 120 என்டிசி மில்களை இயக்காமல் வைத்துள்ளனர். இதன் காரண மாக இந்தியா முழுவதும் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வாழ்வா தாரத்தை இழந்துள்ளனர். நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத் தொகை வழங்கி வருகிறது.