திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சிமன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக கலைஞர் மகளிர் உரிமை திட்ட விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் பிரதீபா, தலைமை எழுத்தர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழ்வாதார இயக்கம் சமுதாய அமைப்பாளர்கள் வனிதா, ஸ்ரீதேவி, கணக்காளர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.