பாட்னா, அக். 17 - பீகார் மாநிலத்தில் கள்ளச்சாரா யம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. பலர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பீகார் மாநிலம் மகார்பூர் கிரா மத்தில், பலர் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட கள்ளச்சாராயத் தைக் குடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலக் குறைபாடுகளால் அவர்கள் மருத்து வமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சிவன் மற்றும் சரண் மாவட்டங்களில் புதனன்று (அக்.16) நிகழ்ந்த இந்த சம்பவத்தில், சிகிச்சை பலனின்றி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 49 பேர் வரை, மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்ட நிலையில், அவர்களில் மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தில், 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதுவிலக்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இத னால், கள்ளச்சாராய புழக்கம் அதிக மாகி, அதனை வாங்கி அருந்தும் பலர் உயிரிழப்பது தொடர் நிகழ்வாக மாறியது. இதுவரை அங்கு 150-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தான், வியாழனன்றும் 27 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஆளும் நிதிஷ் குமார் - பாஜக அரசு கொண்டு வந்த மதுவிலக்குச் சட்டம் தோல்வி அடைந்து விட்டதாக குற்றச்சாட்டுக் கள் எழுந்துள்ளன. “மதுவிலக்குச் சட்டம் இருக்கும் போதும் கள்ளச்சாராயம் கிடைப்பது எவ்வாறு சாத்தியமாகிறது?” என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் மிரித்யுஞ்சய் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். “இதற்குப் நேரடி காரணம் மாநிலத்தின் ஒழுங் கற்ற அரசு செயல்பாடுகள் தான்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது, கள்ளச்சாராயம் விற்பனை செய்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு விசாரணைக் குழுவும் (SIT) அமைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தால் இறந்தவர் களின் உடல், பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறை யினர் ஈடுபட்டு வருகின்றனர்.