மதுரை, ஜூலை 4- “சென்னை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டில் திருச்செந்தூர்- பாளையங்கோட்டை - அம்பா சமுத்திரம் - தென்காசி - குற்றாலம் - செங்கோட்டை சாலையும் மேம்படுத்தப்படுகிறது. இப்பணிக்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. நான்கு வழிச்சாலை அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான இடங்களில் திட்ட அறிக்கை அடிப்ப டையில் சாலை அமைக்கப்படவில்லை” என தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த பிரபு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி. அருள்முருகன் அமர்வு, “திட்ட அறிக்கையின் அடிப்படையில் சாலை அமைக்கப்படுமா? மாற்றி அமைக்கப்பட்டால் முதல் திட்ட அறிக்கையின் அடிப்படையில் கையக்கப்படுத்தப்பட்ட நிலங்க ளின் நிலை என்ன?” என பதிலளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.