இராஜபாளையம், மார்ச் 4- விருதுநகர் மாவட்டத்தி லேயே இராஜபாளையம் நகரம் மக்கள் தொகை, விவ சாயம், தொழில் வளம் போன்றவற்றில் முதன்மை யான நகரமாகும். இராஜபாளையம் நகரில் பிரதானமாக 4 சுடுகாடுகள் உள்ளன. மதுரை சாலையில் காயல்குடி ஆற்று சுடுகாடு, 23 சமுதாயங்களுக்கு பாத்தியப்பட்டதாக அமைந் துள்ளது. செண்பகம் தோப்பு சாலையில் 23 சமு தாயங்களுக்கு பாத்தியப் பட்ட சுடுகாடு செயல்பட்டு வருகிறது. சங்கரன் கோவில் செல்லும் சாலையில் சின் னைய ராஜா சுடுகாடு அமைந் துள்ளது. இந்த சின்னைய ராஜா சுடுகாட்டில் தற்போது ரூ.1 கோடியே 48 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் மின் மயானம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மின் மயானத்தில் நாளொன்றுக்கு 15 பிரே தங்கள் எரிக்க வசதி ஏற் படுத்தப்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் மூலம் எரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது மின் மயானம் கட்டி முடிக்கப்பட்டு, பல இடங்களில் சிசிடிவி பொருத் தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஒரு பிரேதம் எரிப் பதற்கு 19 கிலோ கொண்ட எரிவாயு சிலிண்டர் தேவைப் படுகிறது. இந்த மின்மயா னத்தை இராஜபாளையம் ரோட்டரி கிளப் மூலமாக பராமரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின் மயானத்தில் அடிக்கடி திருட்டுகள் நடப்ப தால் உரிய காவலாளிகள் நியமித்து பாதுகாப்பு ஏற் பாடு செய்யுமாறு பொதுமக் கள் சார்பில் கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளது.