மதுரை, ஆக. 4- கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை, முண்டக்கை, மேம்பாடி ஆகிய பகுதிகளில் ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அங்கு பல்வேறு மீட்பு பணிகளை கேரளா மாநில அரசு மற்றும் ராணுவ படையினர், சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். இந்த நிலச்சரிவில் உடைமைகளையும் உறவுகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி உதவி செய்து வரும் நிலையில் மதுரையில் அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி நிதி திரட்டப்பட்டது.