தென்காசி, ஆக. 30 தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்டம் சார்பில் வயநாடில் நிலச்சரிவினால் பாதித்தப்பட்ட மக்களுக்காக திரட்டப்பட்ட நிதி ரூ 2, 20,000 ஐ(இரண்டு லட்சத்து இருபதாயிரம் ) மதுரை யில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் மயில் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாநில பொதுக் குழு உறுப்பினர் மாடசாமி, மாநில செயலாளர் ராஜ்குமார், மாநில தலைவர் மணிமேகலை, மாநில துணை பொதுச்செயலாளர் முருகன், எஸ்டிஎப்ஐ பொதுக்குழு உறுப்பினர் டேவிட்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.