திருப்பூர், நவ.28- ஊத்துக்குளி வட்டம், நடுப்பட்டி ஊராட்சி, புலவர்பாளையம் நித்திய ஜீவ புரத்தில் 2013ஆம் ஆண்டு 7 நபருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப் பட்டது. அந்த வீட்டுமனைகளுக்கு செல் லும் பாதையை ஒரு சில நபர்கள் ஆக்கிர மித்து வைத்துள்ளனர். அந்த ஆக்கிர மிப்பை அகற்றக் கோரியும், நித்திய ஜீவபுரத்தில் குடியிருக்கும் மக்களுக்கு முறையான சாக்கடை வசதியில்லாத தால், கழிவுநீர் குடியிருப்பு அருகி லேயே தேங்கி நின்று சுகாதார கேடு ஏற்படுத்துவதால், கழிவு நீரை அகற்றக் கோரியும், அனைத்து வீடுகளுக்கும் உறிஞ்சுகுழி அமைத்து தர கோரியும், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஊத்துக்குளி வட் டாட்சியர் அலுவலகம் முன்பு திங்கள் கிழமை காலை 11 மணியளவில் தாலுக்கா செயலாளர் க.பிரகாஷ் தலை மையில் காத்திருக்கும் போராட்டம் துவங்கியது. இந்த போராட்டத்தை தாலுக்கா தலைவர் ஆர்.மணியன் துவக்கி வைத்து உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுக்கா செயலா ளர் எஸ்.கே.கொளந்தசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார் நிறைவுறையாற்றினார். இதில் தாலுக்கா பொருளாளர் எம். பழனிசாமி, கமிட்டி உறுப்பினர்கள் மு. பழனிச்சாமி, கே.எஸ்.கருப்புசாமி மற் றும் புலவர்பாளையம் ஊர்ப் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டம் துவங்கிய தையடுத்து ஊத்துக்குளி வட்டாட்சியர் (பொறுப்பு) சாந்தி, துணை வட்டாட்சி யர் வசந்தா, ஊத்துக்குளி நில வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி குடியிருப்புகள் முன் கழிவுநீர் தேங்கும் பிரச்சனைக்கு, ஊராட்சி நிர் வாகம் மூலமாக உடனடியாக உறிஞ்சு குழி அமைப்பதற்கு பணி துவங்கப்படுகி றது எனவும், முறைப்படி சர்வே செய்து ஆக்கிரமிப்பு அகற்றி வழித்தடத்தை 20 நாட்களுக்குள் ஏற்படுத்திக் கொடுக் கப்படும் என உறுதியளிக்கப்பட் டதையடுத்து போராட்டம் மதியம் 1 மணி யளவில் ஒத்திவைக்கப்பட்டது.