விருதுநகர், பிப்.6- விருதுநகர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் புற நோயாளிகள் பிரி வில் இரு மருத்துவர்கள் மட்டுமே பணியிலிருந்ததால் நோயாளிகள் நீண்ட வரிசை யில் பல மணி நேரம் காத்தி ருக்கும் நிலை ஏற்பட்டது. விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் புதியதாக ஏழு மாடியில் கட்டி முடிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜன.3-ஆம் தேதி மருத்துவச் சேவை தொடங்கப்பட்டது. மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் 300 செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள் என அறி விக்கப்பட்டது. இந்த நிலையில், திங்க ளன்று முதல் தளத்தில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் இரு மருத்துவர்கள் மட்டுமே பணியிலிருந்தனர். அங்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் நோயாளிகள் காத்துக்கிடந்தனர். மருந்து மாத்திரைகள் வழங்கும் இடத்திலும் மக் கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்த னர். வயதான புற நோயாளி கள் நிற்க முடியாமல் அவ திக்குள்ளாகினர். 100-க்கும் மேற்பட்ட மருத் துவர்கள் பணியில் இருப்ப தாகக் கூறப்படும்போது, ஏன்? குறைவான மருத்து வர்கள் மட்டுமே பிறநோயா ளிகள் பிரிவில் உள்ளனர் காத்திருந்தவர்கள் கேள்வி யெழுப்பினர் விருதுநகர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் புறநோயாளிகள் பிரி வில் கூடுதல் மருத்துவர் களைப் பணியில் இருக்கச் செய்ய வேண்டும். மருந்து மாத்திரைகள் வழங்கும் இடத்தை அதிகரித்து அங் கும் கூடுதல் பணியாளர் களை நியமிக்க வேண்டு மென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.