மதுரை, ஜூலை 29- எம்எஸ்டிஇ அறிவித் துள்ளபடி சான்றிதழ்தாரர் களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். அனைத்து நிலை தொழில் நுட்ப காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். காரைக் குடி ஐடிஐ வளாகத்தில் பயிற்சியாளரால் கத்தியால் குத்தப்பட்ட இளநிலை உதவியாளர் ராஜ் ஆனந்த் துக்கு சிறப்பு விடுப்பு மற்றும் மருத்துவ செலவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் மண்டல அளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சனிக்கிழமையன்று உண்ணாவிரதம் நடை பெற்றது. பல்வேறு கிளைத் தலை வர்கள் தலைமை வகித்த னர். மதுரை மண்டல கிளைச் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செய லாளர் ஆ. செல்வம் துவக்கி வைத்து பேசினார், சங்கத் தின் மாநிலச் செயலாளர் எஸ் நவநீதன் கோரிக்கை களை விளக்கி பேசினார். தோழமைச் சங்க நிர்வாகி கள் ஜெ. மூர்த்தி, இரா.தமிழ், சந்திரபோஸ், சு. கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆதரித்துப் பேசினர். சிஐடியு மாவட்ட செயலாளர் இரா. தெய்வ ராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க. நீதி ராஜா ஆகியோர் உரை யாற்றினர். மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாத புரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.