சென்னை, அக்.24- விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் முதன்மைச் செயலாளர் உஞ்சை அரசன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செய லாளர் உஞ்சை அரசன் மார டைப்பு ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அக். 24 அன்று சென்னையில் உயி ரிழந்தார். அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமையகம் அம்பேத்கர் திடலில் வைக் கப்பட்ட அவரது உடலுக்கு விசிக தலைவர் தொல்.திரு மாவளவன் மற்றும் பல் வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் உஞ்சை அரசன் மறைவுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங் கல் செய்தி வெளியிட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செய லாளர் தோழர் உஞ்சை அர சன் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை யடைந்தோம். அவரது மறை வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறோம். தோழர் உஞ்சை அரசன் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெ டுத்தவர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரி கட்சிகளுடன் நேசத்து டன் நெருங்கிப் பழகியவர். அவரது மறைவு விடுத லைச் சிறுத்தைகள் கட்சிக் கும், ஜனநாயக இயக்கங் களுக்கும் ஏற்பட்ட பேரி ழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அன்னாரது குடும்பத்தினருக்கும், விடு தலை சிறுத்தைகள் கட்சி யின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கும், கட்சியின ருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அனுதாபத்தை யும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.