விருதுநகர், மே 29- விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 640 கிராமில் பிறந்த பெண் குழந்தையை தீவிரக் கண்கா ணிப்பின் மூலம் ஒரு கிலோ வரை வளர்த்து சாதனை புரிந்துள்ளனர். வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் வனிதா-மாரிமுத்து தம்பதியர். கர்ப்பிணி வனிதாவிற்கு கடந்த மார்ச் 14-ஆம் தேதி 26 வாரம் மட்டுமே வளர்ச்சியடைந்த 640 கிராம் எடை கொண்ட பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணியின் அறிவுரை யின்படி, அக்குழந்தை பச்சிளம் குழந்தை கள் பிரிவில் சேர்க்கப்பட்டது. குழந்தைக்கு தலைமை மருத்துவர் ஜவஹர், குழந்தை கள் நல தலைமை மருத்துவர் முருகேச லட்சுமணன், மருத்துவர்கள் சண்முக மூர்த்தி, பிரியங்கா ஆகியோர் தொடர்ந்து சிகிச்சையளித்தனர். குழந்தைக்கு செயற்கை சுவாசம், உயர்ரக மருந்துகள் வழங்கப்பட்டது. கண், காது, இருதயம் போன்ற உறுப்பு கள் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டு உரிய சிகிச்சையளிக்கப்பட்டன. கங்காரு அர வணைப்பும் தரப்பட்டது. இதையடுத்து, குழந்தை நன்கு தேறி ஒரு கிலோ எடைக்கு வளர்ச்சியடைந்தது. இந்தநிலையில், வனிதா-மாரிமுத்து தம்பதியரிடம் குழந்தையை மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி ஒப்ப டைத்தார். குழந்தையின் வளர்ச்சிக்காக தொடர் சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு தெரி வித்தார்.