விருதுநகர், ஏப்.3- மாநில அளவிலான ஓட்டப் போட்டி களில் முதலிடம் பெற்ற விருதுநகர் மாவட் டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாண வர். பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு சாதனை புரிய உதவிகளை செய் திட வேண்டுமென கோரிக்கை விடுத்துள் ளார். விருதுநகர் மாவட்டம் திருவில்லி புத்துர் அருகே உள்ளது படிக்காசு வைத் தான்பட்டி. இங்குள்ள குருநாதர் கோவில் தெருவைச் சேர்ந்த தம்பதி புளுகாண்டி-பொன்னுத்தாய் ஆகியோரின் மகன் ராக் கப்பன்(23). பிறப்பிலேயே வாய் பேச முடி யாத. காதும் கேட்காத மாற்றுத் திறனாளி யான இவர், தற்போது. சென்னையில் உள்ள தனியார் கல்லுரி ஒன்றில் பி.காம் பட்டப் படிப்பு 3 ஆம் ஆண்டு பயின்று வரு கிறார். இவருக்கு ஓடுவதில் மிகுந்த ஆர்வம், இதனால், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். சமீ பத்தில் சென்னையில் தேசிய அளவில் நடை பெற்ற 100மீ, 200மீ, மற்றும் 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார், இதையடுத்து, வரும் அக்டோபர் மாதம் குஜராத்தில் நடைபெறவுள்ள உலக அள விலான போட்டியில் கலந்து கொள்ள உள் ளார். இந்நிலையில். திங்களன்று. தான் பரி சாகப் பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றி தழ்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் காண்பித்து பாராட்டுக் களைப் பெற்றார். இதுகுறித்து மாற்றுத்திறனாளி தட கள வீரர் ராக்கப்பனின் தாயார் பொன்னுத் தாய் கூறுகையில், எனது மகனுக்கு உலக அளவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டி யில் கலந்து கொள்வதே லட்சியமாக உள் ளது. அதில் பங்கேற்க வேண்டுமெனில் ஏரா ளமான பணம் செலவாகும். எனது கண வரோ சாதாரண ஆலையில் வேலை செய் யும் தொழிலாளி, எனவே.வசதி படைத்த வர்கள் அல்லது பெரும் நிறுவனத்தினர் உதவி புரிந்தால், ராக்கப்பன் நிச்சயம் வெற்றி பெற்று இந்தியாவின் பெருமை யை நிலை நாட்டுவான் என்று தெரிவித்தார்.