districts

img

மணிப்பூர் வன்முறை: திமுக போராட்டம்

மதுரை, ஜூலை 24- மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், ஒன்றிய, மாநில பாஜக அரசு களைக் கண்டித்தும் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவ கங்கை மாவட்டங்களில் திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மதுரை மாநகர், வடக்கு, தெற்கு மாவட் டங்களை சேர்ந்த நிர்வாகிகள் சின்னம்மாள், உமா சிங்கத்தேவன், கிருத்திகா தங்கப் பாண்டி, மதுரை மாநகராட்சி மேயர் இந்தி ராணி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் திமுக மகளிரணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்  டங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மார்க்ரெட் மேரி, தாமரைச்செல்வி ஆகியோர் தலைமை வகித்தனர். திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், பழனி நகர்மன்றத்தலைவர் உமாமகேஸ்வரி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தேனி

தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தேனி வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பா ளர் பவானி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் லட்சுமணன், தேனி ஒன்றியச் செயலாளர் சக்கரவர்த்தி, நகர் செயலாளர் நாராயண பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். சின்னமனூரில் தேனி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் சாந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்டச் செயலாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன், ஜெயக்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்டச் செயலா ளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். எம்.எஸ்.கே. பவானிராஜேந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் தமிழ்செல்வி போஸ், கவிதா கதி ரேசன், கலைமதிராஜா, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.

சிவகங்கை

சிவகங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட  அமைப்பாளர் பவானி கணேசன், ஹேமலதா செந்தில், மணிமேகலை, மார்க்கரேட்கமலா, மானாமதுரை ஊராட்சி ஒன்றியப் பெருந்  தலைவர் லதாஅண்ணாத்துரை, சண்முகப் பிரியா, ஒமேகாதிலகவதி, ரம்யா, சத்யா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.