புதுதில்லி, ஜூலை 10 - உயிரிழப்பு, ராஜினாமா, கட்சித் தாவல் உள்ளிட்ட சம் பவங்களால் 7 மாநிலங் களின் 13 சட்டமன்ற தொகுதி கள் காலியானதாக அறி விக்கப்பட்ட நிலையில், 13 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி பீகார் மாநிலத்தின் ரூபாலி தொகு தியில் 51% வாக்குகளும், மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரனாகட் தெற்கு, பாக்தா, மணிக்தலா ஆகிய 4 சட்டமன்றத் தொகுதி களிலும் சராசரியாக 62.71% வாக்குகளும், இமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் சராசரியாக 65% பதிவாகிய தாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் வெளி யிட்டுள்ளது. அதேபோல மாலை 3 மணி நிலவரப்படி பஞ்சாப் ஜலந்தர் மேற்கு பகுதியில் 42.60% வாக்குகளும், உத்தர கண்ட் மாநிலத்தின் மங்களூ ரில் 56.21% மற்றும் பத்ரி நாத்தில் 40.50% வாக்கு களும், மத்தியப்பிரதேசத் தில் அமர்வாராவில் 66.58% வாக்குகளும் பதிவாகின.ஜூலை 13 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறு கிறது. வன்முறை பாஜக ஆளும் உத்தர கண்டின் மங்களூர் சட்ட மன்றத் தொகுதியில் காங்கி ரஸ் - பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 4 பேர் காய மடைந்ததாக காவல்துறை அதிகாரி தகவல் தெரி வித்தார். அதே போல திரி ணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்குவங்கத்தில் பாக்தா மற்றும் ரனாகாட் தெற்கு தொகுதியில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அர ங்கேறியுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக பூத் ஏஜெண்டுகள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.