சின்னாளப்பட்டி, டிச.7- திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை அருகே மிளகாய் பட்டி, முசவ னூத்து கிராமங்களுக்கிடையே தனி யார் கல்குவாரி உள்ளது. கிராமமக்க ளின் வாழ்வாதாரமே பூ வியாபாரம் தான். கல்குவாரியால் ஏற்கனவே பாதிக் கப்பட்ட பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடமும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திலும் மனு கொடுத்தனர். ஆனால் இன்னும் நட வடிக்கை இல்லை. இப்போது இரவில் கல்குவாரியிலிருந்து கற்கள் விழும் நிலை உள்ளது என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் நிலக்கோட்டை ஒன்றியச் செயலாளர் காசிமாயன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறு கையில், அரசு அதிகாரிகளும் காவல் துறையும் தனியார் கல்குவாரிக்கு ஆத ரவாக செயல்படுகின்றனர். வெடிச் சத்தத்தால் கற்கள் பறந்து வீட்டின் மேலே விழுவதால் பெரியோர்கள், சிறு வர்கள் உட்பட மக்கள் அச்சத்தில் நடுங்கினர். பூமி அதிர்வது போன்று உணர்ந்ததாக காவல்துறையிடம் மக் கள் தெரிவித்துள்ளனர் என்றார். பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் தினம் தினம் உயிர் பயத்து டன் வாழ்கிறோம். அதிகாரிகள் தனி யார் கல்குவாரியிடம் வாங்குவதை வாங்கிக் கொண்டு கண்டு கொள்ளா மல் இருக்கின்றனர் நடைபெற்ற சம்ப வத்தால் நாங்கள் மிகவும் பயந்து கொண்டிருக்கிறோம் கர்ப்பிணிப் பெண்களும் வயதான முதியவர்களும் கிராமத்தில் உள்ளனர். இரவு நேரத்தில் வெடி ச்சத்தம் கேட்பதால் நாங்கள் அரண்டு கொண்டிருக்கிறோம். மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்கத் தவறினால் பொதுமக்களும் விவசாயிகளும் கல் குவாரியை மூடும் வரை மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.