திண்டுக்கல், நவ.5- செட்டிநாயக்கன்பட்டி ஊரணி யில் தூர் வாரும் பணி மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் படஉள்ளது.இது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றி யக்குழு மற்றும் சிபிஎம் ஒன்றிய கவுன் சிலர் ஆகியோரின் தொடர் போராட் டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். திண்டுக்கல் மாவட்டம், செட்டி நாயக்கன்பட்டி அருகேயுள்ள ஊரணி யில் ஸ்வஜ்பாரத் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆர்.எம்.காலனி மற்றும் நெடுஞ்சாலை ஓரமாக உள்ள அனைத்து ஓட்டல்களில் இருந் தும் வரும் கழிவு நீரோடைகள் இந்த ஊரணியில் கலக்கிறது. இது தொடர் பாக தொடர்ந்து கிராம சபைக் கூட் டத்திலும், ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்திலும் சிபிஎம் ஒன்றியக் கவுன்சிலர் என்.செல்வநாயகம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியக்குழுவும் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு செப்பனிட கேட்டுக் கொண்டனர். வட்டாட்சியர் மற்றும் திட்ட அலுவலர், ஆட்சியர் ஆகி யோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வா கமும் தற்போது நடவடிக்கை எடுத்து ஊரணியை தூர்வாரும் பணியில் ஈடு பட்டு வருகின்றன. கடந்த 50 ஆண்டு களுக்கும் மேலாக இந்த ஊரணி தூர் வாரப்படாமல் கிடப்பில் போடப்பட்ட தால் அந்த நிலங்களையும் பலர் ஆக்கி ரமித்து ஊரணியின் பரப்பளவு சுருங்கி உள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சி யின் பலனாக தற்போது ஊரணியில் தூர்வாரும் பணி ஜேசிபி இயந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த அளவிற்கு மிகவும் கழிவு நீர் குளமாக இந்த ஊரணி இருக்கிறது. தற்போது அந்த ஊரணியில் கழிவு நீர் கலக்கா மல் இருக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அரசு அறி வித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியக்குழு மற்றும் அதன் ஒன்றியக் கவுன்சிலரும் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி யாகும். (நநி)