விருதுநகர், அக்.16- விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். முகாமில், நோயால் பாதிக்கப்பட்ட கால்நடை களுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை ஆய்வு, கருப்பை மருத்துவ சிகிச்சைகள் ஆகியவை இலவச மாக செய்யப்பட்டன. மேலும், சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றிய விவசாயிகளுக்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்கு நர் காயில்ராஜா, கால்நடை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.